பெரியவர் :
எங்கள் தமிழ் அன்னை எத்தனையோ தவம் இருந்து
திங்களாய் செங்கதிராய் திருநாட்டின் ஒலி விளக்காய்
வள்ளுவன் குரல்போல வடிவமோ சிறிதாக
உள்ளமோ இந்த உலகிலும் பெரிதாக
சிறியவர் :
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்
எங்கள் நெஞ்சில் நிறைந்தார்
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்
எங்கள் நெஞ்சில் நிறைந்தார்
அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார்
பெரியவர்:
அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார்
இருவரும் :
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
பெரியவர் :
எதையும் தாங்கும் இதயம் கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவுக்கொண்டு
எதையும் தாங்கும் இதயம் கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவுக்கொண்டு
வைதவர் யாவரும் வாழட்டும் என்று வாழ்த்திய இதயம் அதுவல்லவா
இருவரும் :
அதுவள்ளுவன் காட்டிய வழியல்லவா
சிறியவர் :
மற்றான் தோட்டத்து மாளிகைக்கும் நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்
மற்றான் தோட்டத்து மாளிகைக்கும் நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்
பெரியவர் :
கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான் தாரகமந்திரம் ஆக்கியவர்
நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர்
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
சிறியவர் :
மானத்தைக்காத்திடும் நெசவாளர் அந்த மக்களின் கண்ணீர் தனைபர்த்தார்
பெரியவர் :
நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து நலிந்திடும் ஏழைக்கு வால்வளித்தர்
இருவரும் :
மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார்
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
பெரியவர் :
ஏழைகள் சிரித்திட அரசைமைத்தார் அதில் இறைவனை காண்போம்
என உரைத்தார் எறிந்திடும் குடிசைகள் வருந்திடுவோர்க்கு எரியாவீடுகள்
அமைத்தளித்தார் அங்கு எறியும் விளக்காய் அவர் இருந்தார்
சிறியவர் :
சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
பெரியவர் :
பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை பாரினில் மீண்டும் காட்டியவர்
நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்
இருவரும் :
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
பெரியவர் :
எல்லோர்க்கும் அண்ணன் அவர் இல்லார்க்கு செல்வம் அவர்
சிறியவர் :
நல்லோர்கள் உள்ளம் எல்லாம் நாள்தோறும் வாழுபவர்
பெரியவர் :
சொன்னால் மனம் பதைக்கும் சொல்லவோ வாய் பதைக்கும்
தன்னம்தனிமையிலே தான் உறங்க போனாரோ
சிறியவர் :
தங்கக்கடல் அலையே வாய்மூடி தூங்கும் எங்கள் தங்கத்தமிழ் மகனை
தாலாட்டீ பாடலையோ
பெரியவர் :
பாடு நீ பாடு பைந்தமிழர் நாடென்று ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே
ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே
சிறியவர் :
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார் கொண்ட கருணையிநாள்
எங்கள் நெஞ்சில் நிறைந்தார்
அண்ணா என்று எலோரும் அழைக்க வந்தார் ஆய்ரம் தலைமுறை தழைக்கவந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு